நாட்டில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களினால் இவ்வாறு உள்நாட்டு சந்தையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் ஐஸ் போன்ற சின்தட்டிக் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களம், கடற்படை, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 24 பேருக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.