இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதை இலங்கை அல்லாதோர் மட்டுமே எதிர்ப்பார்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி பெற ஆட்சேபித்தமைக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புகளை வலியுறுத்திய அவர், எந்தவொரு உண்மையான இலங்கையரும் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசியைப் பெற மறுக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
தடுப்பூசி கட்டாயத்தால் நிர்வகிக்கப்படாது என்பதால் விருப்பமில்லாதவர்கள் அதைப் பெறக்கூடாது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
-சி.எல்.சிசில்