கொரொனா தடுப்பூசி பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!! ஈரானிய மதகுரு வெளியிட்டுள்ள தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தடுப்பூசி பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!! ஈரானிய மதகுரு வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுவதாக ஈரானிய மதகுரு Ayatollah Abbas Tabrizian கூறியுள்ளார்.

மெசேஜிங் தளமான டெலிகிராமில் Ayatollah Abbas Tabrizian, தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். டெலிகிராமில் Tabrizian-ஐ கிட்டத்தட்ட 210,000 பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராமில் Tabrizian பதிவிட்டதாவது, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் அருகில் செல்ல வேண்டாம். அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிவிட்டார்கள் என கூறியுள்ளார்.

Tabrizian-வின் கருத்துக்கள் தடுப்பூசி மற்றும் ஓரின சேர்க்கை சமூகம் இரண்டையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாக முக்கிய LGBTQ பிரச்சாரகர் Peter Tatchell கூறினார்.

சர்ச்சைக்குரிய நபரான Tabrizian, மேற்கத்திய மருத்துவம் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில், அவர் ஒரு அமெரிக்க அறிவியல் பாடப்புத்தகத்தை எரித்த வீடியோ வைறலாக பகிரப்பட்டது, இஸ்லாமிய மருத்துவம் அத்தகைய புத்தகங்களை பொய்யாகிவிட்டது என Tabrizian கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.