கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் சிறிய பக்க விளைவுகள் ஏற்படுவது பொதுவானவை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பொருத்தமானதா இல்லையா என்பது குறித்து விமர்சித்துப் பார்க்கப்படுவதாக இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.