இலங்கையிலும் நேபாளத்திலும் ஆட்சியமைப்பதற்கு இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டுள்ளதாக வௌியாகியுள்ள கருத்து தொடர்பில் இந்திய எதிர்கட்சிகள் தமது விமர்சனத்தை வௌியிட்டுள்ளன.
இந்தியாவின் மாநிலங்களில் தமது ஆட்சியை ஸ்தாபித்ததன் பின்னர் இலங்கை மற்றும் நேபாளத்திலும் தமது ஆட்சியை ஸ்தாபிக்கப் போவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லப் குறிப்பிட்டிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை பிரதிபலிப்பதாக இந்திய கம்பியூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்திய அரசியலமைப்பு குறித்த புரிதலின்றி இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் இந்திய உள்துறை அமைச்சர் நேபாள அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி தமக்கு எழுந்துள்ளதாகவும் எனவே இந்த விடயம் குறித்து இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பதிலளிக்க முன்வர வேண்டும் என இந்திய கம்பியூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நேபாளம் மற்றும் இலங்கையின் இறைமையில் இந்திய தலையிட முடியாது என திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.