வயோதிப பெண்ணின் விரலை அறுத்து மோதிரம் திருட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வயோதிப பெண்ணின் விரலை அறுத்து மோதிரம் திருட்டு!


பலங்கொட - எல்லபொல எனும் பகுதியில் நேற்று (03) இனம் தெரியாத ஆண் கொள்ளையர்கள் இருவர் வயோதிப பெண்ணொருவரின் மோதிரத்தை திருட விரலை வெட்டியதால் அவர் காயமடைந்துள்ளார்.


குறித்த இரண்டு கொள்ளையர்களும் அந்த வயோதிப பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து தாக்கிவிட்டு மோதிரத்தை திருடிக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், 83 வயதான அந்த வயோதிப பெண் அவரது வீட்டில் தனியாக வசிப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் எல்லபொல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.


சந்தேக நபர்களின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கயிறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.