மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு முகக் கவசங்களை விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களுக்கு தினமும் ஒரு பாதுகாப்பு முகக்கவசம் தேவைப்படுவதுடன், அதற்காக பெற்றோர் அதிகளவான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலே, மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு முகக் கவசங்களை விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகுமெனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.