20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினர்!


20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு கோரினர்.


முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் தலைமையில் கூடியது.


நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹக்கிம், 'தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக 20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். அதற்கு எமது உயர்பீடம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்த தவறுக்கு பொது மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பது அவசியம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டனர் அவர்களின் செயற்பாடு குறித்து எமது உயர்பீடம் கவலையடைகின்றது' என்றார்.


எவ்வாறாயினும் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதியளிப்பதாக தெரிவித்த உறுதிப்பாட்டுக்கு அமையவே 20 க்கு ஆதரவளித்தாக 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட கூட்டம் கட்சித் தலைமையகமான தாருசலாமில் நேற்று (13) மாலை கூடியது.


இதன்போது 20ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாயிசர் காசிம், எச்.எம்.எம் ஹரிஸ், எம்.எஸ் தௌப்பீக் மற்றும் அன்வர் சாமேட் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.