கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் A9 பிரதான வீதியில் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.