பட்டப்பகலில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி! கிளிநொச்சியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பட்டப்பகலில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி! கிளிநொச்சியில் சம்பவம்!


கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 03 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த சம்பவம்  A9 பிரதான வீதியில் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.