நாட்டின் எதிர்க்கட்சியை வழிநடத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே மிகவும் பொருத்தமானவர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒருவர் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் இருக்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என டெய்லி மிரர் செய்திக்கு பிரதமர் தெரிவித்துள்ளார்
அவருடைய இருப்பு அரசாங்கத்திற்கு பாதகமாக இருந்தாலும், அரசியல் ரீதியாகப் பார்த்தால் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என்றார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வலுவான எதிர்க்கட்சி எப்போதும் அரசியலுக்கு தேவை என்றும், தற்போதைய எதிர்க்கட்சி வலுவற்றது என்றும் கூறினார்.
மேலும், முந்தைய கூட்டு எதிர்க்கட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய எதிர்க்கட்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சியின் பிளவு ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி அல்ல என்றார்.
ஒரு வலுவான எதிர்க்கட்சி ஒரு அரசாங்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் அதை வழங்க கட்டாயப்படுத்தும் என்று அவர் கூறினார்.