நேற்று இறக்குமதி தடைக்கு அளிக்கப்பட்ட அனுமதி இன்று திடீர் நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று இறக்குமதி தடைக்கு அளிக்கப்பட்ட அனுமதி இன்று திடீர் நீக்கம்!


மாபிள் மற்றும் குளியலறை உபகரணங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் இரத்து செய்துள்ளது.


குறித்த தடையை நீக்குவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த தீர்மானம் இன்று நீக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இது குறித்த நடைமுறைகளை செயற்படுத்துவதை இரத்து செய்யுமாறு கோரி சுங்க திணைக்களம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.