இந்தோநேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோநேசியாவின் சுமாத்திரா தீவின் தென்மேற்கு கடல்பகுதியில் இன்று (10) பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.2 ரிக்டெர் அளவிலான பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.