பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை சுயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்! -அரசாங்க வைத்திய சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை சுயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்! -அரசாங்க வைத்திய சங்கம்


பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை தனாக முன்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பொது மக்களுக்கு வழங்கவுள்ளதா தெரிவித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது மிகவும் ஆர்வத்துடன் பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த தடுப்பூசிகளைச் செலுத்தும் போது 100-75 சதவீதம் நன்மை கிடைக்கும் என்றும் கொரோனா தொற்று ஆபத்தான நிலையிலிருந்து குறைத்துக்கொள்ளலாம்.


கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது பொதுமக்கள் தன்னார்வத் தொண்டுடன் செயற்படவேண்டும்.


குறித்த கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்குக் குறைந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.