இலங்கை மற்றும் நேபாளத்தில் பா.ஜ.க (B.J.P) அரசுகளை நிறுவ அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார்.
நேற்று திரிபுரா - இந்திராநகர் பகுதிக்கு விஜயம் செய்தபோது, அங்கு நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் ஷா இதனை கூறியதாக பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பின்னர், பா.ஜ.க கட்சியை அண்டைய நாடுகளிலும் அமைத்து அதன் அரசினை விஸ்தரிக்க பாஜக எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.