இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கின்ற தமிழ் பிரிவினைவாதிகளினால் கடந்த 12 ஆண்டு காலமாக உரிய ஆதாராங்களை வைத்து அதனை நிரூபிக்க முடியாது போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக கடற்படையில் பணியாற்றிய சரத் வீரசேகர நியமிக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் 3 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகளினால் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். பொதுமக்களின் அமோக ஆதரவினால் நாடாளுமன்றுக்கு தெரிவான ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் விமர்சிக்கப்படுகின்றமை நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் பாரிய தாக்கம் செலுத்தும் விடயமாகும்.
ஷவேந்திர சில்வா யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கின்ற தமிழ் பிரிவினைவாதிகளினால் கடந்த 12 ஆண்டு காலமாக உரிய ஆதாராங்களை வைத்து அதனை நிரூபிக்க முடியாது போயுள்ளது என்றார்.