இதன்படி, இன்று (06) காலை 6.00 மணிமுதல் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள ரயில் கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை மாலை 6.00 மணி வரையில் கொழும்பு – புத்தளம் A3 பிரதான வீதி மூடப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த வீதியினூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.