
புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிக்க அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று இனங்காணப்பட்ட புதிய வகை வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இனிமேல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.