நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்த இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுத் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என ஆராய்ச்சிகளின் படி தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்த இதற்கு முன்னர் தீர்மானித்தனர்.
இந்நிலையில், இரண்டாவது கொரோனா தடுப்பூசி மூன்று மாதங்களுக்குப் பின்னர் செலுத்துவது குறித்து விசேட ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச, சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கொரோனா தடுப்பூசிகளைத் தனியார்த்துறை சுகாதார ஊழியர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.