நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
அழகியல் செயன்முறை பரீட்சைகளை நடத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்படைக்களின் அடிப்படையிலான செயன்முறை பரீட்சைகளுக்கு மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.