ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை கையளித்துள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் கோரியுள்ளார்.
விசேட கடிதமொன்றின் மூலம் கர்தினால் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த முதலாம் திகதி அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.
மேலும் தேசிய சுதந்திர தின நிகழ்விலும் இதுபற்றி கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்கமாட்டேன் என்கிற வாக்குறுதியையும் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில்தான் கர்தினால் ரஞ்ஜித், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதுடன், குறித்த அறிக்கையின் பிரதிகளைத் தன்னிடம் வழங்கும்படியும் கேட்டுள்ளார்.