கொரோனா தொற்றுக் காரணமாக இறுதியாக 9 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 95 வயதான ஆண்ணொருவரும், அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்ணொருவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண்ணொருவரும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவருவரும் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரும் யாழ் – ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவருவரும் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவரும் குருதெனிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண்ணொருவரும் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்றைய தினம் கொரோனா தொற்றினால் புதிதாக மேலும் 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.