எம்மை பற்றி தெரியாது! வட கிழக்குக்கு வரும்போது பாதுகாப்பின்றி வந்துவிட வேண்டாம்! மேர்வின் சில்வாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்மை பற்றி தெரியாது! வட கிழக்குக்கு வரும்போது பாதுகாப்பின்றி வந்துவிட வேண்டாம்! மேர்வின் சில்வாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!


வட, கிழக்கு மாகாண தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப் பற்றியோ மேர்வின் சில்வா பூரணமாக புரிந்துகொள்ளவில்லையென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 


இதேவேளை, வட, கிழக்குக்கு வரும் போது அவர் பாதுகாப்பின்றி வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும், அவர் கூறினார். 


பொலிஸ் சீருடையில் தான் இருந்திருந்தால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன் என, மேர்வின் சில்வா, அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் போராட்டமானது, ஜனநாயக ரீதியான போராட்டமாகுமென்றார். ஆனால், இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், மேர்வின் சில்வா கருத்துகளைத் தெரிவித்துள்ளாரென குற்றஞ்சாட்டிய ரவிகரன், இவருடைய இவ்வாறான கருத்து கோமாளித்தனமாகவே இருக்கின்றதெனவும் கூறினார்.


"அத்துடன், பொலிஸ் சீருடையை தான் அணிந்திருந்தால், இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கின்றார். அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டில் பொலிஸ் சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா?" எனவும், ரவிகரன் வினவினார். 


இவரது இத்தகைய கருத்து, பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவர்களின் கடமைகளையும் கேலி செய்வதாக அமைந்தாகத் தெரிவித்த அவர், நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.


-விஜயரத்தினம் சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.