அலி சப்ரியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி சப்ரியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்!


இலங்கையில் தனியார் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமாயின் அது முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைக்காத செயற்பாடாக இருக்க வேண்டும் என அண்மையில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சங்க சபாக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.

அனைத்த சமூகங்கள் சார்ந்த தனியார் சட்டங்களும் இருப்பதாகவும் அவ்வாறாயின் அவையனைத்தையும் திருத்தியே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நிலைக்கு வர முடியும் எனவும் அத்துராலியே ரதன தேரருக்கு பதிலளித்த நீதியமைச்சர் விளக்கமளித்திருந்தார்.

எனினும், பௌத்தர்களுக்கான பிரத்தியேக சட்ட விதிகளை அவ்வாறு தனியார் சட்டங்களுக்குள் அடக்க முடியாது என சங்க சபாக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் சபாநாயகருக்கு இது குறித்த கடிதப் பிரதியை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-சோனகர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.