தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 லட்சங்களை வென்ற காலி பகுதியை சேர்ந்த முஸ்லிம் மாணவி சுக்ரா முனவ்வரை பலரும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுக்ராவின் வீடு தேடி சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் சுக்ரா போன்ற பிள்ளைகளை இந்த நாடு முஸ்லிம் சமூகத்திடம் கேட்கிறது என்றார்.
தீவிரவாத குழுக்களின் தீவிரவாத கருத்துக்கள் இப்பகுதியில் பரவாமல் தடுப்பதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.