இலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த வயது 77 வயது பெண்ணொருவர்.
- கடவத்தை பகுதியை சேர்ந்த 73 வயது பெண்ணொருவர்.
- மொறட்டுவை பகுதியை சேர்ந்த 56 வயது ஆணொருவர்.
- களனி பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.
- கொழும்பு 14 ஐ சேர்ந்த 85 வயது ஆணொருவர்.
- கொழும்பு 13ஐ சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
- மஹரகம பகுதியை சேர்ந்த 76 வயது பெண்ணொருவர்.
- முன்தளம பகுதியை சேர்ந்த 48 வயது ஆணொருவர்.
இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 726 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 68,576 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,639 ஆக பதிவாகியது.
இதேவேளை கொரோனாவில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 62,594 ஆக அதிகரித்துள்ளது.