வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முற்போக்கு பெண்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் பிரதிநிதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக தங்கள் தொழில்களை இழந்து நாடு திரும்ப முடியாமல் குவைத் உட்பட ஏனைய அரபு நாடுகளில் வசிக்கும் பல இலங்கைப் பெண்கள் யாசகம் செய்துவரும் காணொளிகள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.