வத்தளையின் சில பிரதேசங்களில் இன்று (08) இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹேகித்த, பள்ளியவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
மேலும், 1939 என்ற இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.