கொழும்பு நகரில் பதற்ற நிலை - பல வர்த்தக நிலையங்கள் உடைப்பு !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நகரில் பதற்ற நிலை - பல வர்த்தக நிலையங்கள் உடைப்பு !

கொழும்பு − செட்டியார் தெரு பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் இன்று (01) காலை உடைக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

வர்த்தகர்களின் எதிர்ப்பை அடுத்து, வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பகுதி ஒன்றரை மீற்றர் அளவிற்கு உடைக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனை வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், இன்றைய தினம் வருகைத் தந்த அதிகாரிகள், வர்த்தக நிலையங்களை முழுமையாக உடைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதையடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.