கேரளா - பாலக்காடு, ஆலத்தூர் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஜஸீரின் மூன்று குழந்தைகள் ஜின்ஷாத் (12) ரின்ஷாத் (07) ரியாஸ்(03) ஆகிய மூவரும் அருகிலுள்ள மாமரத்திலிருந்து பறித்த மாம்பழங்களை கழுவ ஒரு சகோதரர் குளத்திற்குச் சென்ற போது தவறுதலாக சறுக்கி விழுந்தவிட்டார்.
இதைப் பார்த்து கொண்டிருந்த மற்றொரு சகோதரர் இவரைப் பிடிக்க குளத்தில் குதித்தார் இரு சகோதரர்களும் குளத்தில் சாடி விளையாடுகிறார்கள் என்று நினைத்து கடைசி சகோதரனும் குளத்தில் குதித்து அனைவரும் நீரில் மூழ்கினர்.
எல்லோரும் மூழ்குவதைப் பார்த்த அங்கே நின்றிருந்த சிறுபெண்மணி ஸ்ருதி கதரத் தொடங்கியுள்ளாள்.
இதற்கிடையில் குழந்தைகளின் தாய் அவர்களைத் தேடி வந்த போது ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்து அழ ஆரம்பித்ததும் மக்கள் ஓடி வந்து குளத்திலிருந்து குழந்தைகளை மீட்டனர் ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் அனைவரதும் உயிர் பிரிந்திருந்தது.