திடீரென கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் முடக்கப்பட்ட நகரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திடீரென கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் முடக்கப்பட்ட நகரம்!


கம்பஹா நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்த காரணத்தினால் நகரில் ஒருபகுதி இன்று (09) மாலை முதல் மூடப்பட்டுள்ளது.


கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இதனைத் தெரிவித்தார்.


நகரில் ஒருபகுதியில் வர்த்தக நிலையங்களில் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்கள் இருக்கின்ற பிரதேசங்கள் என மூன்று இடங்கள் அடையாளங் காணப்பட்டு அந்தப்பகுதிகளும் தற்சமயம் முடக்கப்பட்டுள்ளன.


மேலும் குறித்த இடங்களைச் சேர்ந்த 200ற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.