நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 05 உயிரழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கபுலியத்த பகுதியை சேர்ந்த 45 வயது பெண், மொறட்டுவை பகுதியை சேர்ந்த 81 வயது ஆண், கெடவெல பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், குறுநாகல் பகுதியை சேர்ந்த 73 வயது ஆண் மற்றும் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 73 வயது ஆண்.
இந்நிலையில், இன்றைய தினம் புதிதாக மேலும் 975 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.