இணையவழி பரிவர்த்தனை மூலம் ரூ.17 இலட்சத்தி 45,000 மோசடி செய்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றை களனி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
குறித்த குழு மீது பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
பரிசு வென்றதாக கூறி, அதற்கான ஆரம்ப கட்ட பணத்தை வைப்பிலிட செய்ய கூறிய மோசடி என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியை பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நடத்தி வருவதாக களனி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக 4 நைஜீரியர்கள், 2 பெண்கள் மற்றும் இலங்கையர்கள் உட்பட மொத்தமாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியர்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை உள்ள ஒரு வீட்டில் இரண்டு கணினிகள், பல்வேறு தொலைபேசி நாடுகளில் பயன்படுத்தப்பட்ட 79 தொலைபேசி சிம் கார்டுகள், ஏராளமான போலி நாணயத்தாள்கள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். மேலும் இவ்வாறான தொலைப்பேசி அழைப்புக்கள் வெளிநாட்டிலிருந்து வருவதாக மோசடி செய்யப்பட்டது.
குறித்த குழு மீது பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
பரிசு வென்றதாக கூறி, அதற்கான ஆரம்ப கட்ட பணத்தை வைப்பிலிட செய்ய கூறிய மோசடி என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியை பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நடத்தி வருவதாக களனி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக 4 நைஜீரியர்கள், 2 பெண்கள் மற்றும் இலங்கையர்கள் உட்பட மொத்தமாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியர்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை உள்ள ஒரு வீட்டில் இரண்டு கணினிகள், பல்வேறு தொலைபேசி நாடுகளில் பயன்படுத்தப்பட்ட 79 தொலைபேசி சிம் கார்டுகள், ஏராளமான போலி நாணயத்தாள்கள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். மேலும் இவ்வாறான தொலைப்பேசி அழைப்புக்கள் வெளிநாட்டிலிருந்து வருவதாக மோசடி செய்யப்பட்டது.