செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் தற்கொலை அங்கிகள் இரண்டு பொலிஸாரால் இன்று (17) மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா, செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மேலும் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நிலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
-கதீஸ்