ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி எங்களை தடை செய்யுங்கள் ஆனால் அதேவேளை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துங்கள் என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எங்களை தடை செய்வது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் ஆனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியவிதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுபலசேனாவை ஏன் தடைசெய்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தினை வெளியிடவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் வகாபிசத்தையும், ஐஎஸ் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அவர் வரவேற்றுள்ளார்.
எங்களிற்கு இந்த பரிந்துரைகள் ஆச்சரியமிக்கவில்லை இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆராய்ந்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் குரானின் போதனைகளுக்கு எதிராக போரிட்டோம், இந்த போதனைகள் நாடுகளிற்கான புற்றுநோய் போன்றவை சில நாடுகள் இந்த போதனைகளை தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எங்களை தடை செய்வது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் ஆனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியவிதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுபலசேனாவை ஏன் தடைசெய்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தினை வெளியிடவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் வகாபிசத்தையும், ஐஎஸ் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அவர் வரவேற்றுள்ளார்.
எங்களிற்கு இந்த பரிந்துரைகள் ஆச்சரியமிக்கவில்லை இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆராய்ந்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் குரானின் போதனைகளுக்கு எதிராக போரிட்டோம், இந்த போதனைகள் நாடுகளிற்கான புற்றுநோய் போன்றவை சில நாடுகள் இந்த போதனைகளை தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.