நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று (24) நாட்டில் புதிதாக 458 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களில்,

கொழும்பு மாவட்டத்தில் 94 நபர்கள், கம்பஹா மாவட்டத்தில் 76 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், அம்பாறை மாவட்டத்தில் 12 பேர், பதுளை மாவட்டத்தில் 12 பேர், புத்தளம் மாவட்டத்தில் ஒருவர், நுவரெலியா மாவட்டத்தில் 25 நபர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர், யாழ். மாவட்டத்தில் ஐவர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (25) காலை வரை நாட்டில் மொத்தமாக 81,467 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.



அதேநேரம், 76,514 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (24) 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.