கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை முடிவிற்கு கொண்டுவரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்பதாக அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொதுசுகாதார விழுமியங்கள் மற்றும் மத உரிமைகளை மதிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் திருத்தப்பட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் சாதகமானதொரு நடவடிக்கை என தூதுவர் தெரிவித்துள்ளார்.