இலங்கை இராணுவத்தினருக்கு ஜெனீவாவில் எமது அரசாங்கம் முன்னிற்கும்! -ஜீ.எல். பீரிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை இராணுவத்தினருக்கு ஜெனீவாவில் எமது அரசாங்கம் முன்னிற்கும்! -ஜீ.எல். பீரிஸ்


இலங்கை இராணுவத்தினரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஜெனீவாவில் அரசாங்கம் முன்னிற்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


வில்கமுவ - ஹிம்பிலியாகட பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நாட்டின் முப்படையினர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், அவர்களினால் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


$ads={1}


எனினும், முப்பது ஆண்டுகால யுத்தத்தை சக்திமிக்க தலைவர் ஒருவரின் தலைமையில் நிறைவு செய்ய முடிந்ததாகவும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினரே ஈடுபட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆகவே, இராணுவத்திரை, அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும், மக்களின் அனைத்து விதமான தேவைகளுக்கும் இராணுவத்தினர் துணை நிற்பதாகவும், கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.