கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட 25 சுகாதாரப் பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொது வைத்தியசாலையில் இந்த பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை செலுத்தியப் பின்னர் ஏற்பட்ட உடல் சிக்கல்களை அடுத்தே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரைக் காலமும் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களில் எவருக்கும் உடல் சிக்கல்கள் ஏற்பட்டமை குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.