அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகள் சிறுவன் உட்பட 3 பிள்ளைகளையும் தாயாரையும் விட்டுவிட்டு தந்தை விலகிச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் தாய் 3 பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவனின் இரண்டாவது சகோதரி கல்முனையில் வீடு ஒன்றில் வீட்டுவேலைக்குச் சென்று வருவதாகவும் சகோதரனும் சகோதரியும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில் சகோதரியின் உடல்நிலையில் சந்தேகம் கொண்டு கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருவரையும் இன்று திங்கட்கிழமை பொலிலார் கைது செய்ததுடன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.