குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு!


சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியது.


கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்றமையினால் 12 பவுண் தங்க நகையை தன்னையரியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.


அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில்  காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, குறித்த நபரின் 12பவுண்தங்க நகை  தேடிக்கண்டு பிடித்து உரிய நபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.


$ads={1}


இதன் மூலம் சம்மாந்துறை பிரதேச சபைக்கு  நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காகவும்  கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து தங்க நகை  தேடிக்கண்டுபிடித்தமைக்கு   சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் குறித்த மேற்பார்வையாளர், சுகாதார ஊழியர்கள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கும்   நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.


இவ்வாறாக நகை, பணம், பெறுமதியான பொருட்கள் உரிமையார்களை அறியாமல் குப்பைகளுக்குள் வீசப்பட்ட பொருட்கள் உரிமையாளிடம் ஒப்படைந்த பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எம்.எம்.ஜபீர்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.