10 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் பலி!

கொழும்பில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 வது மாடியின் மேல் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (25) நிகழந்துள்ளது

பலியான நபர் கொழும்பில் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் நேற்று (25) அதிகாலை 1:45 மணியளவில் கொல்லுபிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றைக்கு முந்தைய தினம் (24) தூக்கமின்மை காரணமாக சிகிச்சை பெற குறித்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நபர் மருத்துவமனையின் பத்தாவது மாடியில் அமைந்துள்ள கழிப்பறை ஜன்னலினூடாக கீழே குதித்ததாக நம்பப்படுகிறது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.