VIDEO : பௌத்த மதம் அல்லாத மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு ஜனாதிபதியாக முடியாது என்ற சட்டம் விரைவில் - பாராளுமன்றில் அமைச்சர்
Posted by Yazh NewsYN Admin-
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் புதிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
$ads={2}
"தற்போதைய அரசியலமைப்பின் படி, இலங்கையில் பௌத்த திருமணமான ஒருவரே நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்க தகுதியுடையவர்கள். ஆனால் விரைவில் புதியதொரு அரசியலமைப்பு திருத்தம் வர உள்ளது. அரசியலமைப்பில் இதற்கு ஒரு திருத்தத்தை கொண்டு வர வேண்டும். பௌத்த, திருமணமான மற்றும் குழந்தைகளைப் பெற்ற ஒருவரே நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்றே யாப்பில் உள்வாங்கப்படும். குழந்தைகள் இல்லாதவர்களை நாட்டின் ஜனாதிபதியாக அனுமதிக்க முடியாது.
இப்போது உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகின் சுற்றுலாத் துறை சரிந்துள்ளது. உக்ரைன் அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எங்களிடம் வருகிறார்கள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.