ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா உறுதி - CID

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா உறுதி - CID

முக்கிய வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருந்த ஹிஸ்புல்லாஹ், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது

கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


$ads={2}

ஹிஸ்புல்லாவை ஏறக்குறைய 09- மாதங்கள் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைத்திருப்பது தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்புனர் லக்‌ஷ்மன் கிரிஎல்லவின் கேள்விக்கு பதிலழிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்தார்

மேலும் அவர் மீதான குற்றங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை விட நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்புனர் லக்‌ஷ்மன் கிரிஎல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.
$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.