சஜித்தை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித்தை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு!


எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.


எதிர்கட்சி தலைவரை இன்று (06) சந்தித்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


$ads={2}


எதிர்கட்சி தலைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் இரு நாடுகளிடையேயான நீண்டகால வரலாற்று தொடர்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.


இலங்கையில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா வழங்கிய உதவிகளிற்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வீடமைப்பு திட்டத்திற்கு சூட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.