அலுவலகங்களில் தங்கி இருக்காது களத்தில் இறங்கி வேலை செய்யவும்! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலுவலகங்களில் தங்கி இருக்காது களத்தில் இறங்கி வேலை செய்யவும்! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!


நாட்டு சனத்தொகையில் 75% கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத் திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


அதன்போது சட்டத்திட்டங்களில் தங்கி இருக்காது மக்கள் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். 


அலரிமாளிகையில் இடம்பெற்ற அரச ஊழியர்களுக்கான நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 


$ads={2}


உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வௌிநாடுகளுக்குச் செல்லும் பணத்தை உள்நாட்டு விவசாயிகளுக்கு செல்லும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அரச ஊழியர்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 


எனவே அலுவலகங்களில் இருக்காது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தேடிச் சென்று தீர்வு வழங்க அரச ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.