இன்னும் இரண்டே வாரத்தில் கொரோனாவுக்கு முற்றுப் புள்ளி - இலங்கை அரசு அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் இரண்டே வாரத்தில் கொரோனாவுக்கு முற்றுப் புள்ளி - இலங்கை அரசு அதிரடி

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.

இந்த கொடூர தொற்றுக்கு நாளாந்தம் பலர் இலக்காவதுடமன் உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.

அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது


$ads={2}

அதன்படி இன்னும் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று தடுப்பூசி இலங்கைக்கு கிடைத்துவிடும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஔடத தரக்கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

இரண்டு விதமான தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாகவும் பைசர் மற்றும் எக்ஸ்ராசெனிகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளே அவை எனக் கூறிய இராஜாங்க அமைச்சர், இரண்டு வாரங்களில் அவற்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.