உலகின் பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஆரம்பம்!

உலகின் பிரம்மாண்ட தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (16) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

"எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


$ads={2}

"முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்ட உடன், யாரும் முகக்கவசத்தை பயன்படுத்தாமல் இருக்கும் தவறையோ அல்லது சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் தவறையோ செய்ய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் இரண்டாவது டோஸ் மருந்து செலுத்திக் கொண்ட பிறகு தான் போதுமான நோய் எதிர்ப்புத் திறன் உடலில் மேம்படும்" என அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி அப்போது உணர்ச்சிவசப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.