இலங்கை பாடசாலைகளுக்கு முதலுதவி அறைகளை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பாடசாலைகளுக்கு முதலுதவி அறைகளை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் 120 பாடசாலைகளில் மருத்துவ முதலுதவி அறைகள் அமைப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

வலயக்கல்வி உட்பட மாகாண கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன்  இணைந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாப்பதற்கான முயற்சியாக  இந்த நடவடிக்கை காணப்படுவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது

கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, படுக்கைகள், நகர்த்தக்கூடிய திரைகள், முதலுதவி உபகரணங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் குறித்த ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.