நாடளாவிய ரீதியில் 120 பாடசாலைகளில் மருத்துவ முதலுதவி அறைகள் அமைப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.
வலயக்கல்வி உட்பட மாகாண கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை காணப்படுவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது
கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, படுக்கைகள், நகர்த்தக்கூடிய திரைகள், முதலுதவி உபகரணங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் குறித்த ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன.