க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் கோரிக்கை!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையில் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வகுப்புகளில் பங்குபற்றி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதற்கான அனுமதியை வலயக் கல்வி பணிப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.