மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கான அறிவித்தல்! -அஜித் ரோஹண

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கான அறிவித்தல்! -அஜித் ரோஹண


எதிர்வரும் வியாழக்கிழமை (28) முதல் மேல் மாகாணத் திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வெளி யேறும் ஒவ்வொரு நபரிடமும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.


நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.